search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சாராயம் காய்ச்சியவர் கைது

    நன்னிலம் அருகே சாராயம் காய்ச்சியவர் கைது செய்யப்பட்டார்.
    நன்னிலம்:
    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே உள்ள அச்சுதமங்கலம் ரூட்டு தெருவை சேர்ந்தவர் சாமிக்கண்ணு மகன் ஆனந்தன் (வயது 43). 

    இவர் தனது வீட்டின் பின்புறத்தில் திருட்டுதனமாக சாராயம் காய்ச்சி கொண்டிருந்தார்.

    தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆனந்தனை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து அவரிடமிருந்து 60 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×