search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

    திருவாரூரில் பெண் உள்பட 3 பேரை தாக்கியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
    திருவாரூர்:

    திருவாரூர் ஆறுமுக நாடார் சந்து பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் மனைவி வள்ளி (வயது 40). 

    இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த தொழிலாளி வேல்முருகன் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    சம்பவத்தன்று வள்ளி தனது அக்கா மகன்கள் சஞ்சய், குமாரன் ஆகியோரிடம் பேசிக்கொண்டிருந்தார். 

    அப்போது அங்கு வந்த வேல்முருகன் மூவரையும் பார்த்து திட்டி கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

    இது குறித்து வள்ளி திருவாரூர் நகர போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

    அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தியாகராஜன் வழக்குப்பதிவு செய்து வேல்முருகனை தேடி வருகிறார்.
    Next Story
    ×