search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கடலூர் மாவட்டத்தில் இன்ஸ்பெக்டர் உள்பட 15 போலீசாருக்கு கொரோனா

    கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், தலைமை எழுத்தர் முகிலன் மற்றும் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
    கடலூர்:

    தமிழகத்தில் உருமாறிய ஒமைக்ரான் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி கையில் கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் எச்சரிக்கை விடுத்து வருகின்றது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 353 பேருக்கு கொரோனா பரவல் அசுர வேகத்தில் உயர்ந்து வந்த நிலையில், நேற்று கடலூர் மாவட்டத்தில் 305 பேர்களுக்கு தொற்று பரவல் இருந்து வந்தது. இதன் காரணமாக நேற்று ஒரு நாள் மட்டும் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்பட்டது.

    இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடலூர் புதுநகர், திருப்பாதிரிப்புலியூர், வேப்பூர், அண்ணாமலை நகர், சேத்தியாதோப்பு, திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம் மற்றும் ஆயுதப்படை போலீஸ் என கடந்த 2 நாட்களில் 15 போலீசார் உடல்நிலை பாதிக்கப்பட்டு கொரோனா தொற்று பரவல் உள்ளதா? என்பதனை பரிசோதனை செய்தனர்.

    இதில் கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன், தலைமை எழுத்தர் முகிலன் மற்றும் அந்த போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்த 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மேலும் அவர்களை சார்ந்த பலருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதா? என்பதனை சுகாதாரத்துறை அதிகாரிகள் கணக்கெடுத்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் போலீசார் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், அனைத்து போலீசாரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பணியில் ஈடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

    Next Story
    ×