என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழை
சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் 2 மணி நேரம் பலத்த மழை
சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு முழுவதும் பனி அதிகமாக இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்துள்ளது.
மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென இரவு 7 மணி முதல் 7.30 வரை 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதியில் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ஓட்டை குட்டை, புளியம்கோம்பை, பண்ணாரி, வடவள்ளி, பவானிசாகர், திம்பம் மலைப்பகுதி போன்ற பகுதிகளில் இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு முழுவதும் பனி அதிகமாக இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.
இந்நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்துள்ளது.
மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென இரவு 7 மணி முதல் 7.30 வரை 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதேபோல் கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதியில் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.
சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ஓட்டை குட்டை, புளியம்கோம்பை, பண்ணாரி, வடவள்ளி, பவானிசாகர், திம்பம் மலைப்பகுதி போன்ற பகுதிகளில் இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதனால் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
Next Story