search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழை
    X
    மழை

    சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதியில் இடியுடன் 2 மணி நேரம் பலத்த மழை

    சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இரவு முழுவதும் பனி அதிகமாக இருந்தாலும் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்தது. இந்நிலையில் நேற்று ஈரோடு மாவட்டத்தில் சில இடங்களில் பலத்த மழை முதல் மிதமான மழை பெய்துள்ளது.

    மாநகரில் நேற்று காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திடீரென இரவு 7 மணி முதல் 7.30 வரை 30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

    இதேபோல் கவுந்தப்பாடி, வரட்டுப்பள்ளம், பவானி போன்ற பகுதியில் மழை பெய்தது. சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2 மணி நேரம் பலத்த மழை பெய்துள்ளது.

    சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம், ஓட்டை குட்டை, புளியம்கோம்பை, பண்ணாரி, வடவள்ளி, பவானிசாகர், திம்பம் மலைப்பகுதி போன்ற பகுதிகளில் இரவு 2 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சுமார் 2 மணி நேரம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    இதனால் சத்தியமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    Next Story
    ×