search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எருது விடும் விழா நடந்த போது எடுத்த படம்
    X
    எருது விடும் விழா நடந்த போது எடுத்த படம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருது விடும் விழா

    கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், சோமார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் எருது விடும் விழா நடைபெற்றது. இதே போல சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களிலும் எருது விடும் விழா நடந்தது.
    கிருஷ்ணகிரி:

    பொங்கல் பண்டிகை நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.

    ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதே போல இந்த ஆண்டும் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எருது விடும் விழா நேற்று நடந்தது.

    கிருஷ்ணகிரி அருகே கிட்டம்பட்டியில் எருது விடும் விழா நேற்று மாலைநடந்தது. இதையொட்டி சாலையின் இருபுறமும் தடுப்பு கம்புகள் வைத்து கட்டப்பட்டு இருந்தன. தடுப்புகளுக்கு நடுவே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மாடுகள் சீறி பாய்ந்தபடி வந்தன. 300-க்கும் மேற்பட்ட மாடுகளை அதன் உரிமையாளர்கள் அழைத்து வந்திருந்தனர்.

    இதே போல திப்பனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கும்மனூரில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் திப்பனப்பள்ளி, கும்மனூர், எண்ணேகொள், தாசிரிப் பள்ளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, 300-க்கும் மேற்பட்டகாளைகள் கலந்து கொண்டன. கும்மனூர் எல்லைகல் அருகே ஆடு பலியிட்ட பின்னர் மாரியம்மன் கோவிலிருந்து கும்மனூர் - திப்பனப்பள்ளி சாலையில் அமைக்கப்பட்ட தடுப்புகளுக்கு நடுவே காளைகள் சீறி பாயந்தபடி வந்தன. அவற்றை இளைஞர்கள் விரட்டி சென்றார்கள். இதில் சிறந்த காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    அதே போல கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில், சோமார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் எருது விடும் விழா நடைபெற்றது. இதே போல சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களிலும் எருது விடும் விழா நடந்தது. இதை ஏராளமானபொதுமக்கள் பார்த்து ரசித்தனர். 

    Next Story
    ×