search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    3 பேருக்கு வெட்டு
    X
    3 பேருக்கு வெட்டு

    மானாமதுரையில் 3 பேருக்கு வெட்டு

    மானாமதுரையில் பேக்கரி ஊழியர் உள்பட 3 பேரை 4 பேர் கும்பல் வெட்டியது. அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
    மானாமதுரை

    மானாமதுரை - சிவகங்கை ரோட்டில் கோர்ட்டுக்கு எதிரே உள்ள வனிக வளாகத்தில் பேக்கரி கடை  செயல்பட்டு வருகிறது. அந்த பேக்கரிக்கு நேற்று மாலை 4 பேர் வந்தனர். அவர்கள் பேக்கரிக்குள் நின்று சிகரெட் புகைத்துள்ளனர்.

    அவர்களை வெளியே  சென்று சிகரெட் புகைக்குமாறு பேக்கரி கடை ஊழி யரான ஆலம்பச்சேரியை சேர்ந்த சதீஷ் என்பவர் கூறியுள்ளார். அதில் ஆத் திரம் அடைந்த அந்த 4 பேரும் கத்தியால் சதீஷை வெட்டினர். பின்பு அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த சதீஷ் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனு மதிக்கப்பட்டார். பேக்கரி யில் இருந்து சென்ற  அந்த 4 நபர்களும் சோனையா கோவில் அருகே உள்ள வெல்டிங் பட்டறைக்கு சென்று, அங்கிருந்த பாலமுருகன், மாரிமுத்து ஆகியோரையும் கத்தியால் வெட்டியுள்ளனர்.

    வெட்டுக்காயம் அடைந்த அவர்களும் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அடுத்தடுத்து 3 பேர் வெட்டப்பட்ட சம்பவம் மானாமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த மானாமதுரை போலீசார்  சம்பவம் நடந்த பேக்கரி மற்றும் வெல்டிங் பட்டறைக்கு சென்று விசாரணை நடத்தினர். 

    அது தொடர்பாக வழக்குப்பதிந்து தாக்குதலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் 4 பேர் யார்? என்று துப்பு துலக்கி வருகின்றனர். பேக்கரியில் உள்ள சி.சி. டி.வி. காமிராவில் பதிவாகி இருந்த வீடியோ காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×