search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இளம்பெண் தற்கொலை

    கபிஸ்தலத்தில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    கபிஸ்தலம்:

    கபிஸ்தலம் அருகே உள்ள ஆதனூர் ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசிப்பவர் துரைராஜ் மனைவி நித்யா (வயது 26). இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவருக்கு குழந்தை பாக்கியம் இல்லை. 

    இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த இவர் சம்பவத்தன்று 
    வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து நித்யாவின் தாயாரான தரங்கம்பாடி ஆக்கூர் தாகூர் வீதி சங்கர் மனைவி பத்மா (45), கபிஸ்தலம் போலீசில் தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார்.

    இந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அனிதா கிரேசி, சிறப்பு சப்&இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் திருமணமாகி 2 வருடத்தில் பெண் தூக்கு போட்டு இறந்ததால் வரதட்சணை கொடுமை காரணமா? என கும்பகோணம் ஆர்.டி.ஓ. தனி விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×