என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் சேவல் சண்டை நடத்திய 15 பேர் கைது - ரூ.2 லட்சம் பணம், 5 கார்கள் பறிமுதல்
Byமாலை மலர்15 Jan 2022 7:38 AM GMT (Updated: 15 Jan 2022 7:38 AM GMT)
10 சேவல்கள், ரூ 2லட்சத்து 8 ஆயிரம் பணம் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவர் போலீசாருக்கு சட்டவிரோதமாக சேவல் சண்டை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மூலனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குருணைக்கள்பட்டி பாறைக்குழி பகுதியில் சட்டவிரோதமாக சேவல் சண்டையில் ஈடுபட்ட 10 பேரை மூலனூர் போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 10 சேவல்கள், ரூ,2 லட்சத்து 8 ஆயிரம் பணம் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் ஊத்துக்குளி பகுதியில் இரண்டு பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ 2 ஆயிரத்து 900 பறிமுதல் செய்தனர். அதேபோல் தாராபுரம் பகுதியில் சேவல் சண்டையில் ஈடுபட்ட மூன்று பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.4 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X