என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சங்கரன்கோவில் அருகே மது போதையில் வாலிபர் கத்தியால் குத்திக்கொலை
நெல்லை:
சங்கரன்கோவில் அருகே உள்ள சின்னகோவி லான்குளத்தை அடுத்த வெள்ளகவுண்டம் பட்டியை சேர்ந்தவர் பாக்கியம். இவரது மகன் ஜான் பாண்டி(வயது 30).
ஜான் பாண்டிக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகியது. குடும்ப பிரச்சனை காரணமாக அவரது மனைவி தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இவரும், அதே ஊரை சேர்ந்த பாண்டி மகன் அந்தோணி(30) என்பவரும் நண்பர்கள். எப்போதும் ஒன்றாக கூலி வேலைக்கு செல்வார்கள். மேலும் ஒன்றாக அமர்ந்து மது குடிப்பதும் வழக்கம்.
இந்நிலையில் நேற்று பொங்கலையொட்டி நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் வைத்து 2 பேரும் மது அருந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
மதுபோதையில் இருந்த அவர்கள் வாக்கு வாதம் முற்றியதில் ஒருவரையொருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. அப்போது அந்தோணி, தான் இடுப்பில் வைத்திருந்த கத்தியால் ஜான்பாண்டியை குத்தினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த ஜான் பாண்டி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். உடனே அந்தோணி அங்கிருந்து தப்பி சென்றார்.
தகவல் அறிந்த சின்ன கோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஜான் பாண்டி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்தோணியை வலைவீசி தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்