search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    .
    X
    .

    நாமக்கல் மாவட்டத்தில் 198 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 198 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 228 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மேலும் 198 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. 

    இவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஒரே நாளில் 41 பேர் கொரோனாவில் மீண்டு குணம் அடைந்து வீடு திரும்பினர். 

    830 பேர் தொடர்ந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 4 ஆயிரத்து 627ஆக உயர்ந்துள்ளது. 

    குணம்  அடைந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 275 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 522 ஆகவும் உள்ளது.  
    Next Story
    ×