search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சிவகிரியில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் முகக்கவசம் அணியாமல் சுற்றி திரிந்த சுமார் 350 பேருக்கு அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர்.
    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் உள்ள முக்கிய பகுதிகளில் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் தலைமையில், அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை மேற்கொண்டிருந்தனர். 

    அப்போது சிவகிரி மெயின் ரோடு மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் வாகனங்களில் செல்லும் போது முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கும், முகக்கவசம் அணியாமல் நடந்து வந்தவர்களுக்கும் முககவசம் வழங்கி, அத்தியாவசிய தேவையின்றி முககவசம் அணியாமல் பொது இடங்களில் நடமாடியதாக தலா ரூ.200 வீதம் 350 பேர்களுக்கு அபராதம் வசூலிக்கப்பட்டது.

    அப்போது சுகாதார ஆய்வாளர் லாசர் எட்வின் ராஜா சிங், சுகாதார மேற்பார்வையாளர் குமார், தினேஷ் குமார், அலுவலக பணியாளர்கள் தங்கராஜ், சக்திவேலு, மாடசாமி, முத்துப்பாண்டி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் உடன் சென்றனர்.
    Next Story
    ×