என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செங்கோட்டையில் பனை ஓலை விற்பனை மும்முரம்
Byமாலை மலர்13 Jan 2022 9:21 AM GMT (Updated: 13 Jan 2022 9:21 AM GMT)
செங்கோட்டை பகுதியில் பொங்கலையொட்டி பனை ஓலை விற்பனை சூடுபிடித்துள்ளது.
செங்கோட்டை:
செங்கோட்டை பகுதியில் பொங்கலையொட்டி பனை ஓலை விற்பனை சூடுபிடித்துள்ளது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் வீட்டின் முன் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவதுடன் கிராம புறங்களில் பெரும்பாலானோர் வீடுகளில் மாடுகளுக்கு வர்ணம் பூசி பொங்கலிட்டு மகிழ்வர்.
அவ்வாறு பொங்கலிட பனை ஓலைகளை பயன் படுத்துவது ஒரு ஐதீகம் என்பதால் பொதுமக்கள் பொங்கலிட அடுப்பு எரிப்ப தற்கு பனை ஓலையைத்தான் பயன்படுத்துவர்.
இதனால் செங்கோட்டை பகுதியில் பனை ஓலை கட்டு கட்டாக மினிலாரி மற்றும் டிராக்டரில் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது பனைஒலை கட்டுகள் மத்தாளம்பாறை, அகரகட்டு, சேந்தமரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செங்கோட்டை பகுதிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
4 ஓலைகள் கொண்ட ஒரு கட்டு ரூ.60-க்கும், ஒரு ஓலை ரூ.15-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X