என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் கொரோனாவால் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 521ஆக உயர்வு
Byமாலை மலர்13 Jan 2022 8:00 AM GMT (Updated: 13 Jan 2022 8:00 AM GMT)
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தான் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 17,934 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் சென்னையில் பாதிப்பு 7,372 ஆக இருந்தது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தெருக்களில் தடைகளை வைத்து கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு தெருவில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தான் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 145 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்தப்படியாக ராயபுரம் மண்டலத்தில் 83 தெருக்களும், அடையார் மண்டலத்தில் 68 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 52 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 41 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2 தினங்களில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் 5,677 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்குமுன்பு 4,072 தெருக்களில் பாதிப்பு இருந்தது. கடந்த இரண்டு தினங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 17,934 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதில் சென்னையில் பாதிப்பு 7,372 ஆக இருந்தது.
சென்னையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை மாநகராட்சி தெருக்களில் தடைகளை வைத்து கட்டுப்படுத்தி வருகிறது. ஒரு தெருவில் 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தால் அந்த தெரு கட்டுப்படுத்தப்பட்ட தெருவாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 521 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் தேனாம்பேட்டையில் தான் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அங்கு 145 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
அதற்கு அடுத்தப்படியாக ராயபுரம் மண்டலத்தில் 83 தெருக்களும், அடையார் மண்டலத்தில் 68 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 52 தெருக்களும், அண்ணாநகர் மண்டலத்தில் 41 தெருக்களும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2 தினங்களில் கட்டுப்படுத்தப்பட்ட தெருக்களின் எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இதுவரை மொத்தம் 5,677 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்குமுன்பு 4,072 தெருக்களில் பாதிப்பு இருந்தது. கடந்த இரண்டு தினங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருக்கள் எண்ணிக்கை 1,605 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X