search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்.
    X
    குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்.

    பாலியல் வழக்கில் சிக்கியவர்கள் குண்டர் சட்டத்தில் கைது

    சிவகங்கை மாவட்டத்தில் பாலியல் வழக்கில் சிக்கிய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் எஸ்.வி.மங்கலம் போலீஸ் சரகம், சூடானிபட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு வீட்டில் இருந்த சிறுமி பாலியல் தொந்தரவு  செய்யப்பட்டதாக  புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி(வயது28),  பிரபு(35) ஆகியோரை கைது செய்தனர். 

    இந்தநிலையில் அவர்களை  குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரை செய்ததின்பேரில், கலெக்டர் மசூதுதன்ரெட்டி அதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து கணபதி, பிரபு ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

    இது தொடர்பாக  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறுகையில், இது போன்று சிறுமிகளை பாலியல் தொந்தரவு செய்பவர்கள், கல்லூரி பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவர்கள் ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

    மேலும் இது போன்று புகார்கள் இருப்பின் புகார்தாரர்கள் காவல் நிலையத்திற்கு செல்லாமலே 1098 மற்றும் 181 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார்களை அளிக்கலாம். அவ்வாறு அளிக்கப்படும் புகார்தாரர்கள் ரகசியம் காக்கப்படும் என்றார்.
    Next Story
    ×