என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    ஸ்ரீபெரும்புதூரில் கடந்த மாதம் மூடப்பட்ட பாக்ஸ்கான் தொழிற்சாலை நாளை மீண்டும் திறப்பு

    பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார் சத்திரம் பகுதியில் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்போன் உதிரி பாகம் தயாரிக்கும் ‘பாக்ஸ்கான்’ தொழிற்சாலை இயங்கி வருகிவருகிறது.

    இங்கு 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்களை பூந்தமல்லி, ஒரகடம், வாலாஜாபாத், ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட இடங்களில் தொழிற்சாலை நிர்வாகம் விடுதியில் தங்க வைத்து உணவு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுத்து இருந்தனர்.

    இந்த நிலையில் கடந்த மாதம் பூந்தமல்லி அருகே விடுதியில் தங்கி இருந்த பெண் தொழிலாளர்கள் தரமற்ற உணவு சாப்பிட்டதால் 200-க்கும் மேற்பட்டோர் உடல் நிலை பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் சில பெண்கள் குறித்து வதந்தி பரவியது. இதையடுத்து  பெண் தொழிலாளர்கள் ஒன்று கூடி நள்ளிரவில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

    உணவு, அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. 15 ஆயிரம் தொழிலாளர்கள் நிலைமை கேள்விக் குறியானது.

    இந்தநிலையில் பாக்ஸ்கான் தொழிற்சாலை 12-ந் தேதி முதல் செயல்படும் என்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் கடந்த வெள்ளிக்கிழமை கூறி இருந்தார். அதன்படி நாளை (12-ந் தேதி) முதல் பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறக்கப்பட்டு செயல்பட உள்ளது. முதற்கடமாக 500 தொழிலாளர்களை கொண்டு தொழில் சாலை இயங்க உள்ளதாக நிர்வாக தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    படிப்படியாக ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். ஊழியர்களின் பாதுகாப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிற்சாலை நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×