என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி மொத்த வியாபாரம் பாதிப்பு
Byமாலை மலர்11 Jan 2022 11:11 AM GMT (Updated: 11 Jan 2022 11:11 AM GMT)
ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு,
ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளி சந்தையில் மொத்த வியாபாரம் பாதிக்கப்பட்டது.
ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் ஜவுளிசந்தை இயங்கிவருகிறது. இங்கு தினசரி கடைகளும், வாரசந்தையும் நடந்து வருகிறது.
வாரச்சந்தை திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும்.
இந்த வாரசந்தையில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், ஈரோட்டின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.
இங்கு சாதாரண நாட்களைவிட விசேஷநாட்களில் விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த சில வாரமாக வியாபாரம் மந்தமாக இருந்து வந்தது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை.
குறிப்பாக கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வருவது வழக்கம்.
ஆனால் இன்று கூடிய ஜவுளி சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வராததால் மொத்த விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. வெறும் 20 சதவீதம் அளவிற்கு மட்டுமே மொத்த விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதேநேரம் சில்லரை விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக நடந்தது.
தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், செஞ்சி, திருவண்ணாமலை, ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதனால் இன்று 40 சதவீதம் சில்லரை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X