search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மொத்த வியாபாரம் பாதிப்பு"

    • சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • இன்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க் அருகே ஈரோடு ஜவுளி சந்தை செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மதியம் வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

    மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து மொத்த விலையில் துணிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேபோல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை வாங்கி செல்வார்கள். சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்களில் கூடுதலாக வியாபாரம் நடைபெறும்.

    இந்நிலையில் கடந்த தீபாவளியையொட்டி ஜவுளி வியாபாரம் களை கட்டியது. வெளி மாநில வியாபாரிகள், வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்து துணிகளை வாங்கி சென்றனர்.

    ஆனால் கடந்த வாரம் கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் வராததால் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து இந்த வாரமும் ஜவுளி சந்தை கூடியது. தொடர் மழை காரணமாக வெளி மாநிலத்திலிருந்து வியாபாரிகள் குறைந்த அளவே வந்திருந்தனர். எப்போதும் கேரளா, கர்நாடகாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.

    மழை காரணமாக இன்று கேரளாவில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. ஆந்திராவில் இருந்து மட்டும் சில வியாபாரிகள் வந்திருந்தனர்.

    இதனால் மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இன்று வெறும் 10 சதவீதம் மட்டுமே மொத்த வியாபாரம் நடைபெற்றது.

    அதேநேரம் பல்வேறு மாவட்டங்களில் இருந்து உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்ததால் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்றது. இன்று 30 சதவீதம் சில்லரை வியாபாரம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டதால் குளிர் காற்று வீசுகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விதவிதமாக சொட்டர்கள் அதிக அளவில் விற்பனைக்கு வந்துள்ளன.

    சொட்டர் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதேபோல் கம்பளி ஆடைகள் விற்பனையும் நன்றாக இருந்தது.

    ×