என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பேச்சிப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கேலி செய்த வாலிபர் கைது
Byமாலை மலர்11 Jan 2022 6:28 AM GMT (Updated: 11 Jan 2022 6:28 AM GMT)
பேச்சிப்பாறை அருகே பத்தாம் வகுப்பு மாணவியை கேலி கிண்டல் செய்தது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை:
குழித்துறையை அடுத்த காயல்ரோட்டை சேர்ந்தவர் சுபின் (வயது25), இவர் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவரை கேலி- கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் சுபின் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த மாணவி பள்ளிக்கு செல்ல தயங்கினார். சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது மாணவி அவரை சுபின் கேலி செய்து ஆபாசமாக பேசியது குறித்து கூறினார்.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுபினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குழித்துறையை அடுத்த காயல்ரோட்டை சேர்ந்தவர் சுபின் (வயது25), இவர் அந்த பகுதியில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை பின்தொடர்ந்து சென்று அவரை கேலி- கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கு மாணவி எதிர்ப்பு தெரிவித்தார். இந்த நிலையில் சுபின் மாணவியிடம் ஆபாசமாக பேசியுள்ளார்.
இதனால் பயந்து போன அந்த மாணவி பள்ளிக்கு செல்ல தயங்கினார். சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் அவரிடம் விசாரித்தனர். அப்போது மாணவி அவரை சுபின் கேலி செய்து ஆபாசமாக பேசியது குறித்து கூறினார்.
இதுபற்றி மாணவியின் பெற்றோர் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சுபினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X