search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
    X
    காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.

    குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு

    கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இன்று புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    புஞ்சைபுளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள நல்லூர் ஊராட்சியில் உள்ளது தாசம்பாளையம் கிராமம். இக்கிராம பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களுக்கு தொட்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறி இன்று காலை 7 மணி அளவில் புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புஞ்சைபுளியம்பட்டி இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி தலைமையிலான போலீசார் மற்றும் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் உங்கள் குடிநீர் பிரச்சினை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் புளியம்பட்டி- பவானிசாகர் ரோட்டில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    Next Story
    ×