search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் 348 பேரும், காஞ்சிபுரத்தில் 343 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை வழக்கம்போல முதல் இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 12,895 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1512 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் 608 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதேபோன்று தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் 348 பேரும், காஞ்சிபுரத்தில் 343 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வேலூரில் 295 பேரும், திருச்சியில் 275 பேரும், திருப்பூரில் 219 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி 10 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×