என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
பண்ணாரி சோதனை சாவடியில் போக்குவரத்து பாதிப்பு
பண்ணாரி சோதனை சாவடியில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சத்தியமங்கலம்:
பண்ணாரி சோதனை சாவடியில் ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்ததால் அந்த பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனைசாவடியில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
குறிப்பாக கர்நாடக மாநிலத்திலிருந்து தமிழகத்திற்கும், தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கும் தினமும் நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இன்று தமிழகத்தில் முழுஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் பொது போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அதேநேரம் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இன்றுகாலை கர்நாடக மாநிலத்திலிருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகள் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்தன.
இதேப்போல் தமிழகத்தில் இருந்து கர்நாடகத்துக்கும் 50-க்கும் மேற்பட்ட லாரிகள் சரக்குகளை ஏற்றிவந்தன. ஒரேநேரத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் பண்ணாரி சோதனைசாவடி பகுதிக்கு வந்ததால் போலீசார் ஒவ்வொரு லாரிகளையும் சோதனை செய்து அனுமதித்தனர்.
இதனால் பண்ணாரி சோதனைச்சாவடிபகுதியில் லாரிகள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் லாரிகள் சென்றதால் போக்குவரத்து சீரானது.
Next Story






