என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சென்னையில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வரும் போலீசார்
Byமாலை மலர்8 Jan 2022 6:17 AM GMT (Updated: 8 Jan 2022 6:17 AM GMT)
தாம்பரம், ஆவடி மாநகர பகுதியிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி போலீஸ் கமிஷனர்கள் ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி) ஆகியோரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
சென்னை:
கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக களத்தில் நிற்பவர்கள் போலீசார்.
பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களில் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஐகோர்ட் போலீஸ் உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கொரோனா 2-வது அலையின் போது போலீஸ் துறை சில உயிரிழப்புகளையும் சந்தித்தது. இப்போதும் நோய் தொற்றுக்கு பலர் ஆளாகி வருவதால் பணியின் போது எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
பொது மக்கள், வாகன பயணிகளை விசாரிக்கும் போது உரிய இடைவெளியில் நின்று விசாரிக்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிந்திருக்காவிட்டால் முதலில் மாஸ்க் அணிய வைத்து விட்டு அதன் பிறகு பேச வேண்டும்.
குடிபோதையை பரிசோதிக்கும் போதும் ஊதுகுழாயை கையாளும் போதும் கவனம் தேவை. எல்லோரும் கையுறை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதேபோல் தாம்பரம், ஆவடி மாநகர பகுதியிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி போலீஸ் கமிஷனர்கள் ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி ஆகியோரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
கொரோனா தடுப்பு பணியில் முன்கள பணியாளர்களாக களத்தில் நிற்பவர்கள் போலீசார்.
பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் அவர்களில் பலர் நோய் தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஐகோர்ட் போலீஸ் உதவி கமிஷனர் மாரியப்பன், இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன், எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே கொரோனா 2-வது அலையின் போது போலீஸ் துறை சில உயிரிழப்புகளையும் சந்தித்தது. இப்போதும் நோய் தொற்றுக்கு பலர் ஆளாகி வருவதால் பணியின் போது எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி கமிஷனர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.
பொது மக்கள், வாகன பயணிகளை விசாரிக்கும் போது உரிய இடைவெளியில் நின்று விசாரிக்க வேண்டும். அவர்கள் மாஸ்க் அணிந்திருக்காவிட்டால் முதலில் மாஸ்க் அணிய வைத்து விட்டு அதன் பிறகு பேச வேண்டும்.
குடிபோதையை பரிசோதிக்கும் போதும் ஊதுகுழாயை கையாளும் போதும் கவனம் தேவை. எல்லோரும் கையுறை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
இதேபோல் தாம்பரம், ஆவடி மாநகர பகுதியிலும் போலீசார் மிகுந்த எச்சரிக்கையுடன் பணியாற்றும்படி போலீஸ் கமிஷனர்கள் ரவி (தாம்பரம்), சந்தீப்ராய் ரத்தோர் (ஆவடி ஆகியோரும் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X