search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண்ணை எரிக்க முயற்சி
    X
    பெண்ணை எரிக்க முயற்சி

    குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

    சிங்கம்புணரி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை செய்தார். அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் எரிக்க முயன்றனர்.
    சிங்கம்புணரி

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் வடவன்பட்டியை சேர்ந்தவர் அருள்செல்வம். இவர்  5 ஆண்டுகளுக்கு முன்பு கல்லம்பட்டியை சேர்ந்த வைஷ்ணவி (வயது25) என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளான்.

    அருள்செல்வம் வெளிநாடு சென்ற நிலையில் வைஷ்ணவி தாயார் வீட்டி லேயே இருந்தார்.

    ஒரு மாதத்திற்கு முன் வெளிநாட்டில் இருந்து அருள்செல்வம் திரும்பிய நிலையில் 15 நாட்களுக்கு முன் வைஷ்ணவியை   தாயார் வீட்டில் இருந்து அழைத்து வந்தார். 

    இந்த நிலையில், கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த வைஷ்ணவி எலி மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

    இதை அறிந்த கிராம மக்கள் உடனடியாக  வைஷ்ணவியின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று எரிக்க முயன்றனர். 

    இந்த  தகவல் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்தது. போலீசார் அங்கு  சென்று   உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×