என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிங்கம்புணரி அருகே நகை பறிப்பு திருடன் கைது
Byமாலை மலர்7 Jan 2022 9:40 AM GMT (Updated: 7 Jan 2022 9:40 AM GMT)
சிங்கம்புணரி அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில் செயின் பறிப்பு கொள்ளையன் சிக்கினான்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியம் எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள சோதனைச் சாவடியில் காவல் சார்பு ஆய்வாளர் நடராஜன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த சிங்கம்புணரி வட்டம் எஸ்.புதூர் ஒன்றியம் குளத்துப்பட்டி பகுதியை சேர்ந்த கணேஷ் மகன் பாரதிராஜா (வயது 20) என்பவரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தனர்.
அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். காவல் துறையினர் விசா ரணையை தீவிரபடுத்தியபோது பாரதிராஜாவுக்கு கடந்த ஆண்டு மல்லா கோட்டையில் நடந்த செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரிய வந்தது. அவரை எஸ்.எஸ்.கோட்டை போலீசார் கைது செய்து திருப்பத்தூர் ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X