என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொங்கல் பரிசு
பொங்கல் பண்டிகைக்கு முன் பரிசு பொருட்கள் கிடைக்குமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
பொங்கல் பண்டிகைக்கு முன் இலவச பொருட்கள் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புதுச்சேரி:
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 21 வகையான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதேபோல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து 10 வகையான பொங்கல் பொருட்களை வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 10 வகையான பொருட்களை மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் விதமாக கொள்முதல் செய்ய பாப்ஸ்கோ சார்பில் இன்று (வியாழக்கிழமை) டெண்டர் விடப் படுகிறது.
அதன்பின்னரே பொங்கல் பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் ஒட்டுமொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து பேக்கிங் செய்ய வேண்டும். எனவே பொங்கல் பண்டிகைக்குள் இலவச பொருட்கள் கைக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ஆகியன இன்னும் மக்களை முறையாக சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொங்கல் பொருட்களை விரைவில் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் 21 வகையான பொங்கல் பொருட்கள் வழங்கப்படுகிறது.
இதேபோல் புதுவையிலும் பொங்கல் பொருட்கள் வழங்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து 10 வகையான பொங்கல் பொருட்களை வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட 10 வகையான பொருட்களை மக்களுக்கு பொங்கல் பரிசாக வழங்கும் விதமாக கொள்முதல் செய்ய பாப்ஸ்கோ சார்பில் இன்று (வியாழக்கிழமை) டெண்டர் விடப் படுகிறது.
அதன்பின்னரே பொங்கல் பொருட்களை பேக்கிங் செய்யும் பணிகள் நடைபெற உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ளதால் ஒட்டுமொத்தமாக பொருட்களை கொள்முதல் செய்து பேக்கிங் செய்ய வேண்டும். எனவே பொங்கல் பண்டிகைக்குள் இலவச பொருட்கள் கைக்கு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனெனில் தீபாவளி பண்டிகைக்கு அறிவிக்கப்பட்ட 10 கிலோ இலவச அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை ஆகியன இன்னும் மக்களை முறையாக சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பொங்கல் பொருட்களை விரைவில் வழங்க அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story






