என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடலூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி
Byமாலை மலர்5 Jan 2022 10:33 AM GMT (Updated: 5 Jan 2022 10:33 AM GMT)
கடலூரில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலன் (வயது 35) என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜெயசீலன் நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டதும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயசீலன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, பலியான வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சிதம்பரத்தை சேர்ந்த ஜெயசீலன் (வயது 35) என்பதும், சென்னையில் தங்கியிருந்து கட்டிட வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் ஜெயசீலன் நேற்று மாலை சென்னையில் இருந்து திருச்செந்தூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சிதம்பரத்திற்கு புறப்பட்டதும், கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தை கடந்து சென்ற போது அவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஜெயசீலன் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X