என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    புதுவையில் தனித்தனி விபத்தில் 4 பேர் காயம்

    புதுவையில் தனித்தனி விபத்தில் 4 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை கோரிமேடு ராஜாஅண்ணாமலைநகரை சேர்ந்தவர் கோபால் (வயது48). இவர் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் இளநிலை எழுத்தராக பணிபுரிந்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் மேட்டுப்பாளையம் சென்றார். அங்குள்ள பால் பூத் அருகே மோட்டார் சைக்கிளை திருப்பிய போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக கோபால் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட கோபால் படுகாயமடைந்தார். அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    விழுப்புரம் பூவரசன் குப்பம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சிவபெருமாள். இவரது மகன் சிவக்குமார் (21). இவர் பிளம்பர் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் மோட்டார் சைக்கிளில் புதுவை-வழுதாவூர் சாலையில் வந்து கொண் டிருந்தார். கவுண்டம் பாளையத்தில் தனியார் ஆஸ்பத்திரி அருகே வந்த போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராத விதமாக சிவகுமார் ஓட்டிசென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலைதடுமாறி விழுந்த சிவகுமார் கை, கால் மற்றும் முகத்தில் படுகாயமடைந்தார். அங் கிருந்தவர்கள் சிவகுமாரை மீட்டு சிகிச்சைச்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

    இந்த 2 விபத்துக்கள் குறித்து கோரிமேடு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளத்தை சேர்ந்தவர் சிக்கந்தர் அலி (72). இவர் ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் ஆவார். இவரது மனைவி பாத்திமா பீவி(65). இவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நேற்று சுல்தான்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அரும்பார்த்தபுரம் மேம்பாலத்தில் வந்த போது அந்த வழியாக வந்த கார் சிக்கந்தர்அலி ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சிக்கந்தர் அலி மற்றும் அவரது மனைவி பாத்திமா பீவி ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அங்கிருந்த போலீசார் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×