என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மாமல்லபுரம் அருகே கடற்கரையில் திருநங்கை பிணம்- கொலை செய்யப்பட்டாரா?

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கடற்கரை ஓரத்தில் 40 வயது மதிக்கத் தக்க திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த சூலேரிக்காடு கடற்கரை ஓரத்தில் 40 வயது மதிக்கத் தக்க திருநங்கை ஒருவர் பிணமாக கிடந்தார்.

    மாமல்லபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? என்ற விவரம் தெரியவில்லை. மர்ம நபர்கள் திருநங்கையை கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×