search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கெட்டிசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கரும்புகள் சாய்ந்து கிடப்பதை காணலாம்.
    X
    கெட்டிசமுத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் கரும்புகள் சாய்ந்து கிடப்பதை காணலாம்.

    அந்தியூர் அருகே சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை- 2 ஏக்கர் கரும்புகள் சாய்ந்து நாசம்

    கெட்டிசமுத்திரம் பகுதியில் வீசிய பலத்த சூறாவளி காற்றுக்கு தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்தன.
    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மிதமான வெயில் இருந்தது.

    இந்த நிலையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கெட்டிசமுத்திரம் பகுதியில் பலத்த சூறாவளிக்காற்றும் வீசியது. இந்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த பகுதியில் உள்ள ஏராளமான தோட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 2 ஏக்கர் பரப்பளவிலான கரும்புகள் சாய்ந்தன.

    இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது, ‘கரும்புகள் 10 மாத பயிராகும். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கரும்புகளை சாகுபடி செய்தோம். இவை இன்னும் 4 மாதத்தில் வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தது. அதற்குள் நேற்று முன்தினம் வீசிய சூறாவளிக்காற்றில் கரும்புகள் சாய்ந்தன. இது எங்களை வேதனைப்படுத்தியுள்ளது’ என்றனர். இதுபற்றி அறிந்ததும் வேளாண் அதிகாரிகள் நேரில் சென்று சேதமடைந்த கரும்புகளை பார்வையிட்டு சென்றனர்.
    Next Story
    ×