search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    சுங்குவார்சத்திரம் அருகே ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளை

    சுங்குவார்சத்திரம் அருகே ஒரே நாளில் 3 வீடுகளில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சேந்தமங்கலம் கிராமம் பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் சுந்தரராஜன். இவர் மூளையில் அறுவை சிகிச்சை செய்து சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இவருடைய மருத்துவ செலவுக்காக வீட்டில் 3 லட்சம் பணம் வைத்து உள்ளனர். வீட்டில் உள்ள அனைவரும் சுந்தர்ராஜனை பார்ப்பதற்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

    இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் சுந்தர்ராஜன் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 3.25 சவரன் மற்றும் 3 லட்சம் ரொக்க பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    அதேபோல் சுந்தர்ராஜன் வீட்டின் பின்புறம் குளக்கரை தெருவில் ராமன் என்பவர் வீட்டில் வெள்ளி கொலுசு மற்றும் அவர் வீட்டில் அருகிலுள்ள மணி என்பவர் வீட்டில் 4 ஆடுகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தனர்.

    தகவல் கிடைத்ததும் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×