என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு
Byமாலை மலர்1 Jan 2022 7:52 AM GMT (Updated: 1 Jan 2022 7:52 AM GMT)
படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
திருப்பூர்:
காங்கேயம் அடுத்துள்ள கீரனூர் மொட்டரபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 46). கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயத்தில் இருந்து திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
சிவன்மலை அருகே வலது புறமாகத் திரும்பியபோது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X