search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    காங்கேயம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதி தொழிலாளி உயிரிழப்பு

    படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
    திருப்பூர்:

    காங்கேயம் அடுத்துள்ள கீரனூர் மொட்டரபாளையத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் ( வயது 46). கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு தனது மோட்டார் சைக்கிளில் காங்கேயத்தில் இருந்து திருப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். 

    சிவன்மலை அருகே வலது புறமாகத் திரும்பியபோது திருப்பூரில் இருந்து காங்கேயம் நோக்கி வந்த வேன் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். 

    அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×