search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    சிங்கம்புணரி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு

    சிங்கம்புணரி அருகே பெண்ணிடம் 7 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிங்கம்புணரி:

    சிங்கம்புணரி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருங்காகோட்டை பகுதியை சேர்ந்த முத்துசாமி மனைவி சாந்தா (வயது 42). இவர் தனது இருசக்கர வாகனத்தில் தனியாக சிங்கம் புணரியில் நடைபெற்ற வார சந்தைக்கு சென்று காய்கறிகள் வாங்கி கொண்டு ஊருக்கு சென்றுள்ளார். அப்போது கிருங்கா கோட்டை யாதவபுரம் அருகே சாந்தாவின் இருசக்கர வாகனம் பின்னால் வந்த இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் சாந்தா அணிந்து இருந்த 7 பவுன் தாலி செயினை பறித்துக்கொண்டு சென்று விட்டார். இது குறித்து சாந்தா கொடுத்த புகாரின் அடிப்படையில் சிங்கம்புணரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×