என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விராலிமலை அருகே கிரேன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்28 Dec 2021 11:16 AM GMT (Updated: 28 Dec 2021 11:16 AM GMT)
விராலிமலை அருகே கிரேன் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவூர்:
விராலிமலை தாலுகா, ஆவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சகாயராஜ். இவரது மகன் லெனின் இன்பராஜ் (வயது 21). ஐ.டி.ஐ. படித்து முடித்துள்ள இவர், விராலிமலை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கிரேன் ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். லெனின் இன்பராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. அதேபோல நேற்று முன்தினம் இரவும் அவர் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அவரை, வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர். இந்தநிலையில், லெனின் இன்பராஜ் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் உள்ள ஒரு அறையில் மின் விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டு தொங்கியுள்ளார். வெளியில் சென்றிருந்த சகாயராஜ் சிறிது நேரத்தில் வீடு திரும்பியபோது மகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை கீழே இறக்கி அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு லெனின் இன்பராஜை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X