என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
ஆரணி அருகே குடும்ப தகராறில் தச்சுத்தொழிலாளி தற்கொலை
ஆரணி அருகே குடும்ப தகராறில் தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணியை அடுத்த அரையாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (வயது 50), தச்சுத்தொழிலாளி. இவருக்கும் மனைவி சிவசங்கரிக்கும் இடையே வேலையில்லாமல் இருந்து வந்ததால் குடும்பத்தை நடத்த முடியாமல் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த வேடியப்பன் நேற்று காலை விஷத்தை குடித்து விட்டு மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை டாக்டர்கள் பரிசோதித்ததில் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக, தெரிவித்தனர்.
இதுகுறித்து மனைவி சிவசங்கரி கொடுத்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த வேடியப்பனுக்கு சரஸ்வதி, பவித்ரா என்ற 2 மகளும், அருண்குமார் என்ற மகனும் உள்ளனர்.
Next Story






