search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    தேன்கனிக்கோட்டை, ஓசூரில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை

    தேன்கனிக்கோட்டை, ஓசூரில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை தாலுகா கண்டிகானப்பள்ளி அருகே உள்ள எலசெட்டியை சேர்ந்தவர் ஸ்ரீ வரதராஜன் (வயது 31). விவசாயி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் அவர் வயிற்று வலியால் அவதிப்பட்டார். இந்த நிலையில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் திருகேரி அருகே உள்ள எம்.சி.ஹள்ளியை சேர்ந்தவர் கோபி (45). இவர் ஓசூரில் சாந்தி நகர் பகுதியில் தங்கி போட்டோகிராபராக பணி செய்து வந்தார். இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கோபி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×