என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வெம்பாக்கம் அருகே ஆசிட் கேன் வெடித்து தொழிலாளி பலி
Byமாலை மலர்24 Dec 2021 9:42 AM GMT (Updated: 24 Dec 2021 9:42 AM GMT)
வெம்பாக்கம் அருகே ஆசிட் கேன் வெடித்ததில் தொழிலாளி உடல் சிதறி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூசி:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம் பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 29). இவர் ஆக்கூர் கூட்ரோட்டில் சிமெண்டு ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனபக்கம் காலனியை சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகன் சுகுமார் (28). என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மதியம் சுமார் 12 மணி அளவில் அங்குள்ள சுவற்றின் ஓரம் பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆசிட் கேனை திறக்க முயன்றார். முடியாததால் சிறிய கத்தியால் கேனை அறுக்க முயன்றார்.
அப்போது திடீரென ஆசிட் கேன் வெடித்து சிதறியது. இதில் சுகுமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அவருடைய உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதுபற்றி தகவலறிந்ததும் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு உடல்சிதறி இறந்து கிடந்த சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா உக்கம் பெரும்பாக்கம் காலனியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 29). இவர் ஆக்கூர் கூட்ரோட்டில் சிமெண்டு ஜன்னல்கள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். இவரிடம் மகாஜனபக்கம் காலனியை சேர்ந்த அன்னப்பன் என்பவரின் மகன் சுகுமார் (28). என்பவர் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். மதியம் சுமார் 12 மணி அளவில் அங்குள்ள சுவற்றின் ஓரம் பல மாதங்களாக பயனற்று கிடந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆசிட் கேனை திறக்க முயன்றார். முடியாததால் சிறிய கத்தியால் கேனை அறுக்க முயன்றார்.
அப்போது திடீரென ஆசிட் கேன் வெடித்து சிதறியது. இதில் சுகுமார் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். அவருடைய உடல் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதுபற்றி தகவலறிந்ததும் தூசி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு உடல்சிதறி இறந்து கிடந்த சுகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவலறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.
மேலும் இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X