என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே ஊழியர் பலி
காட்பாடி அருகே ரெயிலில் அடிபட்டு ரெயில்வே ஊழியர் பலி
காட்பாடி அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயிலில் அடிபட்டு ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஜோலார்பேட்டை:
காட்பாடி அருகே கே. வி. குப்பம் மேல் விலாச்சூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமாரசாமி (வயது 43). ரெயில்வே ஊழியர்.
இன்று அதிகாலை காட்பாடி அருகே விரிஞ்சிபுரம் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் சிக்கி தலை துண்டாகி பரிதபமாக இறந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






