என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திருப்பரங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலி
திருப்பரங்குன்றம் அருகே மின்சாரம் தாக்கி ஆட்டோ டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம்:
திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் வசித்து வந்தவர் ரசூல்தீன் (வயது 39). ஆட்டோ டிரைவர். இவர் அவரது வீட்டு மாடியில் இருந்த துண்டை எடுத்தார். இந்த நிலையில் சாய்த்து வைக்கப்படடு இருந்த உயரமான கம்பியானது மின்வயரை உரசி தடுமாறி அவர் மீது விழுந்துள்ளது. அதில் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி ரசூல்தீன் தூக்கிவீசப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடினார். அதை கண்ட அவரது உறவினர்கள் அவரை திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story