என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கருங்கல்பாளையம் காவிரி ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலை முயற்சி
Byமாலை மலர்18 Dec 2021 8:53 AM GMT (Updated: 18 Dec 2021 8:53 AM GMT)
ஈரோடு கருங்கல்பாளையம் அருகே குடும்ப பிரச்சனை தொடர்பாக காவிரி ஆற்றில் குதித்து இளம்பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கருங்கல்பாளையம்-பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி ஆறு பாலம் உள்ளது.
இங்கு 2 பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம். மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
சமீபகாலமாக காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் கருங்கல்பாளையம் காவிரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அந்த பெண் காவிரி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தார்.
அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தனபால் (42), அவரது மனைவி வடிவரசி (36) ஆகியோர் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை தங்களது பரிசலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி (36) என்றும் இவரது கணவர் சங்கர் என்றும் தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக சுமதி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சுமதி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சுமதி கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமதியை காப்பாற்றிய தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினர்.
ஈரோடு கருங்கல்பாளையம்-பள்ளிபாளையத்தை இணைக்கும் முக்கிய பாலமாக காவிரி ஆறு பாலம் உள்ளது.
இங்கு 2 பாலங்கள் உள்ளன. ஒன்று சிறிய பாலம். மற்றொன்று புதிய பாலம். புதிய பாலம் பழைய பாலத்தை விட சற்று உயரம் பெரியதாக இருக்கும். இந்த பாலம் வழியாக தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன.
சமீபகாலமாக காவிரி ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் உள்ள போலீசார் காவிரி ஆற்று பாலத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை 11 மணி அளவில் கருங்கல்பாளையம் காவிரி பாலத்தில் இருந்து காவிரி ஆற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
அந்த வழியாக வந்த லாரி டிரைவர் ஒருவர் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து கருங்கல்பாளையம் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் மற்றும் போலீசாரிடம் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது அந்த பெண் காவிரி ஆற்றில் தத்தளித்து கொண்டிருந்தார்.
அப்போது காவிரி ஆற்றில் பரிசலில் மீன் பிடித்து கொண்டிருந்த ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த தனபால் (42), அவரது மனைவி வடிவரசி (36) ஆகியோர் காவிரி ஆற்றில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை தங்களது பரிசலில் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதனையடுத்து டவுன் டி.எஸ்.பி. அனந்தகுமார் உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து அந்தப் பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் விசாரணையில் தற்கொலைக்கு முயன்ற பெண் திருச்செங்கோடு, மாங்கொட்டை பாளையம் பகுதியை சேர்ந்த சுமதி (36) என்றும் இவரது கணவர் சங்கர் என்றும் தெரியவந்தது. குடும்ப பிரச்சனை காரணமாக சுமதி காவிரி ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
சுமதி தற்போது நல்ல நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து சுமதி கணவர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமதியை காப்பாற்றிய தனபால் மற்றும் அவரது மனைவி வடிவரசியை போலீசார் பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X