search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    குளித்தலை அருகே மூதாட்டி தற்கொலை

    குளித்தலை அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குளித்தலை:

    குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் மேலத்தெருவை சேர்ந்தவர் நாச்சிமுத்து மனைவி பாக்கியம் (வயது 83). வயது முதிர்வு காரணமாக இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மன விரக்தியில் இருந்து உள்ளார். இந்த நிலையில் பூச்சி மருந்து குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி மூதாட்டி பாக்கியம் நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×