என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விவசாய தொழிலாளர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டம்
Byமாலை மலர்11 Dec 2021 9:02 AM GMT (Updated: 11 Dec 2021 9:02 AM GMT)
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து விவசாய தொழிலாளர்கள் சாலையில் வாகனத்தை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கல்:
கீழ்வேளூரில், கச்சனம் சாலை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்கக்கோரியும் சாலையில் வாகனம் நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஜோதிபாஸ், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர்.
இதேபோல பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருமருகல் பஸ்நிலையம் எதிரே சி.ஐ.டி.யூ. தொழிற் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க மாவட்ட குழு உறுப்பினர் லெனின் தலைமை தாங்கினார். ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மார்க்ஸ், பிரபாகரன், கஸ்தூரி, வாலிபர் சங்க கிளை செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X