என் மலர்
உள்ளூர் செய்திகள்

புகார்
வியாபாரம் செய்வதுபோல் நடித்து திருட்டில் ஈடுபடும் கும்பல்- பொதுமக்கள் புகார்
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் சிக்குமுடி வாங்குவதாக தினமும் வருகைதரும் மர்மநபர் தனியாக வசிக்கும் முதியவர்கள் பற்றி நோட்டம் விடுவது தெரியவந்துள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை பகுதியில் தெருத்தெருவாக வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர்.
இதில் ஒரு சிலர் மட்டுமே வியாபார நோக்கத்தில் வருகின்றனர். சிலர் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வியாபாரம் நடக்காவிட்டாலும் தினமும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அப்போது யார் யார்? குடியிருக்கின்றனர் என்ற விவரங்களை சேகரிக்கின்றனர். பின்னர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கைவரிசை காட்டுகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் சிக்குமுடி வாங்குவதாக தினமும் வருகைதரும் மர்மநபர் தனியாக வசிக்கும் முதியவர்கள் பற்றி நோட்டம் விடுவது தெரியவந்துள்ளது.
இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதுபோன்று தெருக்களில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை பகுதியில் அதிக அளவில் திருட்டு நடைபெற இந்த கும்பல்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இதில் போலீசார் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை பகுதியில் தெருத்தெருவாக வந்து சிலர் வியாபாரம் செய்கின்றனர். அவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனர்.
இதில் ஒரு சிலர் மட்டுமே வியாபார நோக்கத்தில் வருகின்றனர். சிலர் வீடுகளை நோட்டமிட்டு திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுபற்றி அறிந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் வியாபாரம் நடக்காவிட்டாலும் தினமும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். அப்போது யார் யார்? குடியிருக்கின்றனர் என்ற விவரங்களை சேகரிக்கின்றனர். பின்னர் கூட்டாளிகளுடன் சேர்ந்து கைவரிசை காட்டுகின்றனர்.
திருவண்ணாமலையை அடுத்த வேங்கிகாலில் சிக்குமுடி வாங்குவதாக தினமும் வருகைதரும் மர்மநபர் தனியாக வசிக்கும் முதியவர்கள் பற்றி நோட்டம் விடுவது தெரியவந்துள்ளது.
இதுபற்றி அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதுபோன்று தெருக்களில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி அவர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும். திருட்டில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவண்ணாமலை பகுதியில் அதிக அளவில் திருட்டு நடைபெற இந்த கும்பல்தான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இதில் போலீசார் அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
Next Story






