என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    வேலூரில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த வாலிபர் ரெயில் மோதி பலி

    வேலூரில் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்த வாலிபர் ரெயில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் கஸ்பா மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது35). இவர் நேற்றிரவு கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தின் அருகே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்தார்.

    அப்போது சரக்கு ரெயில் ஒன்று வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் சிலர் சந்தோஷ் குமாரை எழுந்திருக்கும்படி கூச்சலிட்டனர். ஆனாலும் அவர் எழுந்திருக்கவில்லை.

    வேகமாக வந்த ரெயில் சந்தோஷ் குமார் மீது மோதியது. இதில் அவர் பரிதாபமாக இறந்தார். காட்பாடி ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடிக்கடி ரெயில்கள் வருவதால் தண்டவாளத்தில் அமர்ந்து மது குடிக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×