என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
கணியம்பாடி அருகே தொழிலாளி தற்கொலை
கணியம்பாடி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அடுக்கம்பாறை:
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். வேண்டா (36) என்ற 2-வது மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். சாந்தமூர்த்தி தினமும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாந்தமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடியை அடுத்த கம்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தமூர்த்தி (வயது 45), கூலித்தொழிலாளி. இவருக்கு 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். வேண்டா (36) என்ற 2-வது மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். சாந்தமூர்த்தி தினமும் குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டு தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் அவர் மனைவியிடம் பணம் கேட்டு உள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் சாந்தமூர்த்தி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் தாலுகா போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






