என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுவையில் தடுப்பூசி கட்டாய சட்டம் அமுல்- சுகாதாரத்துறை அறிவிப்பு
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.
கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடந்த 20 மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. இருப்பினும் அவ்வப்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றை தடுக்க 100 சதவித தடுப்பூசி போட்ட யூனியன் பிரதேசமாக மாற்ற புதுவை அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இற்காக தடுப்பூசி சிறப்பு முகாம்களை அரசின் சுகாதாரதுறை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதோடு, வீடுவீடாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடக்கிறது. இதுவரை முதல் தவணை தடுப்பூசியை 7 லட்சத்து 74 ஆயிரம் பேரும், 2வது தவணை தடுப்பூசியை 4 லட்த்து 48 ஆயிரம் பேரும் செலுத்தியுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக 77 சதவிதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். மீதமுள்ள 23 சதவீதத்தினரையும் செலுத்த வைக்க பல்வேறு முய்ற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தற்போது உலகம் முழுவதும் உருமாறிய கொரோனா வைரசான ஒகைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வைரஸ் தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் பாதிப்பு அதிகமாக ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக புதுவையில் தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
புதுவை பொது சுகாதார சட்டம் 1973-ன் பிரிவு 54(1) விதியின் கீழ் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.2 தவணை தடுப்பூசியும் செலுத்தியிருக்க வேண்டும்.
இது தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலு கூறியதாவது:-
கொரோனாவை தடுக்கும் வகையில் கட்டாய தடுப்பூசி சட்டம் உடனடியாக அமல்படுத்தப்படுகிறது. இதை மீறுபவர்கள் சட்ட விதிகளின் படி தண்டிக்கப்படுவார்கள். தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களில் சுற்றி வருவதால் கொரோனா பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதனால் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பொது இடங்களுக்கு வருபவர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
வெளியே நடமாடுபவர்களிடம் சான்றிதழ் உள்ளதா.? என சோதனை செய்யவும் திட்டமிட்டுள்ளோம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் வெளியே சுற்றினால் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு ஸ்ரீராமலு கூறினார்.
இதையும் படியுங்கள்... 2 மாதங்களுக்கு முன்பு இறந்து போன தொழிலாளியின் செல்போனுக்கு வந்த கொரோனா தடுப்பூசி சான்றிதழ்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்