search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா

    நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 53,629 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே நேற்று புதிதாக 45 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்து 674 ஆக அதிகரித்து உள்ளது.

    இந்த நிலையில் நேற்று 48 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். இதுவரை 52,670 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 495 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனாவுக்கு 508 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று சேலம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பேளுக்குறிச்சி அருகே உள்ள தாண்டாகவுண்டனூரை சேர்ந்த 61 வயது மூதாட்டிசிகிச்சை பலன்இன்றி இறந்தார். இதனால் இம்மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 509 ஆக அதிகரித்து உள்ளது.
    Next Story
    ×