search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
    X
    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

    காரைக்குடியில் அரசு டவுன் பஸ்களில் பாதுகாப்பான பயணம் மேற்கொள்வது குறித்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் தினந்தோறும் அந்த வழியாக இயக்கப்படும் அரசு பஸ்களில் பயணம் செய்து காரைக்குடி பகுதிக்கு வந்து படித்து விட்டு மீண்டும் மாலையில் அதே பஸ்சில் சொந்த கிராமத்திற்கு சென்று வருகின்றனர்.

    இந்தநிலையில் காரைக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக அரசு டவுன் பஸ்களில் மாணவ, மாணவிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் தொங்கியபடி மாணவர்கள் பஸ்சில் பயணம் செய்வதாக அடிக்கடி புகார் வந்தது. இதையடுத்து காரைக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் தலைமையில், சாலை பாதுகாப்பு படை ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்மணிமாறன் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் நேற்று காரைக்குடி பகுதிக்கு வந்து செல்லும் டவுன் பஸ்களை ஆய்வு செய்தனர். மேலும் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்றால் ஏற்படும் விபத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

    மேலும் நேற்று காரைக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து கிராமப்புறங்களுக்கு சென்ற அரசு பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏறுவதற்காக கூட்டமாக வந்தனர். அவர்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மாணவர்கள் நீண்டவரிசையில் வந்து பஸ்சில் ஏறும்படி அறிவுரை வழங்கினர். மேலும் பஸ்சில் பயணம் செய்யும் மாணவர்கள் கட்டாயமாக முக கவசம் அணியும் படியும், போதிய சமூக இடைவெளியை பின்பற்றவும், ஆபத்தான முறையில் படிக்கட்டுகளில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.

    இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் ஆனந்த் கூறியதாவது:- அரசு டவுன் பஸ்களில் மாணவர்கள் இலவச பயணம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒரு சில கிராமங்களில் இருந்து காரைக்குடி நகருக்கு ஒரே ஒரு டவுன் பஸ்கள் மட்டும் இயக்கப்படுவதால் அதில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே கூட்டம் அதிகமாக காணப்படும் இடங்களுக்கு கூடுதலாக அரசு டவுன் பஸ்கள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளோம். பஸ்களில் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×