என் மலர்
உள்ளூர் செய்திகள்

தற்கொலை
ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை
ஓசூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூரில் தின்னூர் அம்மன் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி ரேகா (வயது 30). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ரேகா தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மத்திகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ரேகாவுக்கு திருமணம் ஆகி 6½ ஆண்டுகள் ஆவதால் ஓசூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






