என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேப்பனப்பள்ளி அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதல்: 8 பேர் படுகாயம்
Byமாலை மலர்2 Dec 2021 10:16 AM GMT (Updated: 2 Dec 2021 10:16 AM GMT)
வேப்பனப்பள்ளி அருகே ஷேர் ஆட்டோ- மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்ட விபத்தில் பெண்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 35). இவரது ஷேர் ஆட்டோவில், முத்துராமன் உள்பட 7 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிந்தன் (33) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தமிழக எல்லையான அரியனப்பள்ளி அருகில் வந்த போது ஷேர் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கோவிந்தன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோவும் கவிழந்தது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
3 ஆம்புலன்சு உடனே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்த 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள ஐப்பிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராமன் (வயது 35). இவரது ஷேர் ஆட்டோவில், முத்துராமன் உள்பட 7 பேர், ஆந்திர மாநிலத்தில் இருந்து வேப்பனப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கோவிந்தன் (33) என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். தமிழக எல்லையான அரியனப்பள்ளி அருகில் வந்த போது ஷேர் ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டன.
இதில் மோட்டார் சைக்கிளில் வந்த கோவிந்தன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். ஷேர் ஆட்டோவும் கவிழந்தது. இதில் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த 4 பெண்கள் உள்பட 7 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள், உடனே ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
3 ஆம்புலன்சு உடனே சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது. காயம் அடைந்த 8 பேரும் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
விபத்து குறித்து ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X