என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4 ¼ கோடி வருவாய்
Byமாலை மலர்24 Nov 2021 4:08 AM GMT (Updated: 24 Nov 2021 4:08 AM GMT)
பழனி முருகன் கோவிலில் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம் கிடைத்தது.
பழனி :
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலும், உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையிலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியில் பணியில் பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 வருவாயாக கிடைத்தது.
மேலும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 150 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், விளக்கு உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,453 கிராம், வெள்ளி 15 கிலோ (14,995 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் முழுமையாக நடைபெறவில்லை. மாலையில் நேரம் ஆனதால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 92 லட்சத்து 63 ஆயிரத்து 140-ம், தங்கம் 461 கிராம், வெள்ளி 4169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138-ம் இருந்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 288-ம் கிடைத்தது.
பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையிலும், உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலையிலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த பணியில் பணியில் பழனி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள், வங்கி ஊழியர்கள் ஆகியோர் ஈடுபட்டனர். இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.2 கோடியே 36 லட்சத்து 64 ஆயிரத்து 825 வருவாயாக கிடைத்தது.
மேலும் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 150 செலுத்தப்பட்டிருந்தது. இதுதவிர தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன வேல், சங்கிலி, மோதிரம், பாதம், மயில், தொட்டில், விளக்கு உள்ளிட்ட பொருட்களும் போடப்பட்டிருந்தது. அதன்படி தங்கம் 1,453 கிராம், வெள்ளி 15 கிலோ (14,995 கிராம்) காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. ஆனால் காணிக்கை எண்ணும் பணி நேற்று முன்தினம் முழுமையாக நடைபெறவில்லை. மாலையில் நேரம் ஆனதால் பாதியில் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் நேற்று 2-வது நாளாக காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 92 லட்சத்து 63 ஆயிரத்து 140-ம், தங்கம் 461 கிராம், வெள்ளி 4169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138-ம் இருந்தது. இதன்மூலம் கடந்த 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை மூலம் மொத்தம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 288-ம் கிடைத்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X